கும்பகோணம், ஜூன் 7-
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலம்சுழி பகுதியில் ஏராளமான விளிம்புநிலை யில் வசிக்கும் பாசி மணி மாலை, ஊசி போன்றவற்றை விற்கும் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஏராளமா னோர் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கான அரசு பயன்கள் எவ்விதத்திலும் பயன்பெற முடியாத சூழ் நிலையில் விழிப்புணர்வு இல்லாததால் இருந்து வந்த னர். இந்நிலையில் தஞ்சை மாவட்ட சிஐடியு தலைவர் கள் அமைப்புசார தொழிலா ளர்களுக்கு நலவாரிய அட்டை மற்றும். மருத்துவ காப்பீட்டு அட்டை பயன் பாடுகளை பெற விழிப்பு ணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் மத்திய தொழிற்சங்க சிஐடியு மாவட் டத் தலைவர் எம்.கண் ணன், மாவட்டப் பொருளா ளர் பேர் நிதி ஆழ்வார் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் விளிம்பு நிலை யில் உள்ள மக்களுக்கு தமிழ்நாடு அரசால் கிடைக் கக்கூடிய பயன்களை விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அப்போது அங்கு குடி யிருந்து வரும் விளிம்பு நிலை மக்களான நரிக்குறவர்கள் ஏராளமானோர் குடும் பத்துடன் கலந்து கொண்டு விழிப்புணர்வை பெற்று நல வாரிய பதிவிற்கான ஏற்பாடு களை செய்தனர். மேலும் அப்பகுதியில் தரமான தார் சாலை அமைத்திடவும் ஊன முற்றோர் மற்றும் முதி யோர்களுக்கு வழங்கப் படும் அரசு உதவி தொகை யை தாமதம் இன்றி வழங்கி டவும் கோரிக்கை வைத்த னர்.