திருவாரூர், ஜுன் 21- இந்திய தொழிற்சங்க மையத்தின் திரு வாரூர் மாவட்டக் குழு கூட்டம் சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் எம்.கே.என். அனிபா தலைமை வகித்தார். நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட்ட தலைவர்களுக்கும், வாக்களித்த வாக்காளர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது. மேலும், தஞ்சையில் நடைபெற்ற சிஐ டியு மாநிலக் குழு கூட்ட முடிவின்படி கட்டுமா னம், உடல் உழைப்பு மற்றும் தொழில்வாரி யான முறைசாரா தொழிலாளர் நல வாரி யங்களில் வழங்கப்படும் பணப் பயன்களை விரைந்து வழங்க வேண்டும். நலவாரிய இணையதளப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். பதிவு, புதுப்பித்தல் மற்றும் பணப் பயன்களில் உள்ள குளறுபடிகளை அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 16.7.24 அன்று திருவாரூர் நலவாரிய அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான தொழிலாளர் களை திரட்டி பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் டி.முரு கையன், மாவட்டப் பொருளாளர் இரா.மாலதி, மாநிலக் குழு உறுப்பினர் ஏ.பிரேமா மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் 70 சிஐடியு செய்தி ஆண்டு சந்தா சேகரித்து வழங்கிய, கூட்டுறவு சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் எஸ்.செல்வத்திற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.