districts

தூய்மைப் பணியாளர்களை தரக்குறைவாக பேசியதற்கு சிஐடியு கண்டனம்

திருச்சிராப்பள்ளி, மே 17 - திருச்சி புறநகர் மாவட்டம் மண்ணச்ச நல்லூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை  செயல் அலு வலர் தரக்குறைவாக பேசியுள்ளார். இதற்கு சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை சங்கம் சார்பில் கண்ட னம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது குறித்து செயல் அலுவலரை சந்தித்து முறையிடப்பட்டது.  இதையடுத்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் செயல் அலுவலர், “எனது  வார்த்தைகளால் உங்களது மனம் புண்பட்டிருந்தால், அதற்காக நான்  வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்”  என தூய்மை பணியாளர்களிடம் தெரி வித்தார். இந்த பேச்சுவார்த்தையில் சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை மாவட்ட செயலாளர் பன்னீர்செல் வம், தலைவர் ராஜா, செயலாளர் ஜெக தீஷ், துணைத்தலைவர்கள் பெருமாள், வாசு, மாரியம்மாள் உள்பட 50-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.