districts

img

ஆட்டோ கண்ணாடி உடைப்பு: சிஐடியு கண்டனம்

கரூர், ஜூலை 21 - கரூர் மாவட்டம், புலியூர் அருகே உள்ள கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் க.லோகநாதன். இவர் அண்ணா மினி டெம்போ சங்கத்தில் (சிஐடியு) புலியூர் கடை வீதியில் உள்ள  ஆட்டோ நிலையில் வாடகைக்கு டாடா  ஏசி ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்தி வரு கிறார்.  இவர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், “ஜூலை 20 (சனிக்கிழமை) அன்று இரவு  சுமார் 8 மணியளவில் புலியூர் அம்பேத் கர் நகரை சேர்ந்த ராகுல், லோகநாதன் ஆகிய இருவரும் தகராறு செய்து கொண்டிருந்துள்ளனர். அதன் பிறகு மேற்கண்ட இருவருக்கும் அடிதடி சண்டையாக மாறியதில், ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஆட்டோ நிலையத்தில் நிறுத்தியிருந்த க.லோகநாதனின் டாடா  ஏசி ஆட்டோ வாகனத்தை அடித்து,  முன்பக்க கண்ணாடியை உடைத்து  விட்டனர். அருகில் இருந்த லோக நாதன், “ஏன் எனது ஆட்டோவை அடித்து கண்ணாடியை உடைத்தீர்கள்” என்று கேட்டதற்கு, ராகுல், லோகநாதன் ஆகியோர் க.லோகநாதனை தாக்க முற்பட்டதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்” என கூறியுள்ளார். சிஐடியு மாவட்ட துணைத் தலை வர் எம்.சுப்பிரமணியன், மாவட்ட பொரு ளாளர் ப.சரவணன், சிஐடியு ஆட்டோ  சங்க மாவட்டத் தலைவர் என்.ரெங்க ராஜ், புலியூர் கிளை தலைவர் சந்திரசேகர், கிளை செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.  சிஐடியு கண்டனம்  ஆட்டோவை அடித்து முன்பக்க  கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி யது மட்டுமின்றி ஆட்டோ தொழி லாளிக்கு கொலை மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தியதற்கு சிஐடியு கரூர்  மாவட்டக் குழு கண்டிக்கிறது. இத்தாக்குதலில் ஈடுபட்ட ராகுல், லோக நாதன் ஆகிய இருவரின் மீதும் வழக்குப்  பதிந்து இது போன்ற சமூக விரோதி கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆட்டோ தொழிலாளி லோகநாதனுக்கு உரிய பாதுகாப்பு கிடைத்திடவும் காவல்துறை  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐ டியு கரூர் மாவட்டக் குழு சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.