districts

img

பத்திரிக்கையாளர்களுக்கு சிஐடியு பாராட்டு விழா

அறந்தாங்கி, பிப்.10-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உலக பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு, அறந்தாங்கி பத்திரிக்கையாளருக்கு இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பாக பாராட்டு விழா ரயில்வே பீடர் சாலை சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிஐடியு இணை ஒருங்கிணைப்பாளர் கே. தங்கராஜ் தலைமை வகித்தார். அறந்தாங்கி செய்தியாளர்கள் தந்தி டிவி நிருபர் கணேஷ் பாபு,  சன்நியூஸ் செய்தியாளர் ஆர். செந்தில்குமார், தினமலர் செய்தியாளர் ஹரிகரன், தினகரன் செய்தியாளர் ஜி. வெங்கடேசன், கலைஞர் டிவி செய்தியாளர் என். தர்மராஜா, நியூஸ் 18 செய்தியாளர் ராஜசேகரன், ராஜ் நியூஸ் செய்தியாளர் ஏ. ஆர். இளையராஜா, தினத்தந்தி நிருபர் செல்வகுமார், மக்கள் குரல் செய்தியாளர் நாகராஜன், மூன் டிவி செய்தியாளர் மாரிமுத்து, தீக்கதிர் செய்தியாளர் வி.துரை பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு வட்டாட்சியர் திருநாவுக்கரசு, வர்த்தக சங்க தலைவர் ஆடிட்டர். தங்கதுரை, நகர்மன்ற தலைவர் இரா ஆனந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவிஞர் எஸ். கவிவர்மன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கி, சால்வை அணிவித்து, பாராட்டினர். சிஐடியு அறந்தாங்கி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஆர். கர்ணா நன்றி கூறினார்.