districts

கிறித்துவ உபதேசியர்கள், பணியாளர்கள் நலவாரியத்தில் சேர வாய்ப்பு

திருச்சிராப்பள்ளி, மார்ச் 25- தமிழ்நாட்டில் உள்ள கிறித்துவ தேவா லயங்களில் பணியாற்றும் உபதேசியர்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள் (ம)தொழுநோயா ளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியா ளர்கள் போன்றோர்களின் சமூக, பொருளா தார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறித்  துவ தேவாலயங்களில் பணிபுரியும் உப தேசியர்கள் மற்றும் பணியாளர் நலவாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இந்த நலவாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படி வங்களை திருச்சிராப்பள்ளி மாவட்ட பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலிக் திருச்சபை, அதன் பேராயர்கள் மற்றும் ஆயர்கள், ப்ராட்டஸ்டாண்ட் திருச்  சபைகள் ஆயர்கள், சினாட் ஆப் பெண்ட கோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்றுச் சமர்ப்பிக்கவேண்டும். நலவாரியத்தில் உறுப்பினராக விரும்பும் ஒற்றை போதகர் தேவாலயங்களின் விண்  ணப்பம் சினாட் ஆப் பெண்டகோஸ்டல் சர்ச்சஸ் மூலம் அனுப்பப்படலாம். மேற்கா ணும் சபைகளின் பரிந்துரையின் அடிப்படை யில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலரால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை  வழங்கப்படும். வாரியத்தில் பதிவுசெய்யும்  உறுப்பினர்கள் மற்றும் குடும்பஉறுப்பி னர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புதுறையின் கட்டுப்பாட்டின் கீழ்  இயங்கிவரும் ஏனைய அமைப்புசாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டுவரும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்  ளலாம்.

;