districts

img

மருங்கூரில் சோழர் கால செப்பு நாணயம் கண்டெடுப்பு

கடலூர், ஜூலை 2- பண்ருட்டி அருகே மருங்கூரில் நடைபெற்று வரும் தமிழக அரசின் தொல்லியல் துறை அகழாய்வின்போது ராஜராஜன் சோழர் காலத்தைச் சேர்ந்த செப்பு நாணயம் கண்டெடுக்கப் பட்டது. கடலூர் மாவட்டம், மருங்கூர் பகுதியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் முன்னிலையில் காணொலி காட்சிகள் மூலம்  முதலமைச்சரால் தொடங்கப்பட்டு நடை பெற்று வருகிறது. மூன்று குழுக்களாக நடைபெற்று வரும் இந்த அகழாய்வு பணியின் போது  40 சென்டி மீட்டர் ஆழத்தில்  ராஜராஜன் சோழர் காலத்தைச் சேர்ந்த செப்பு  நாணயம் கண்டெடுக்கப் பட்டுள்ளது. சுமார் 2.33 செ.மீ  விட்டமும், 2.5 மி.மீ தடிமனும்,  3 கிராம் எடையும் கொண்ட தாக கிடைக்கப்பட்டுள்ள இந்த செப்பு நாணயத்தின் முன்பக்கத்தில் மனித உருவ மும், இடது கை கீழ்நோக்கி யும் வலது கை மேல் நோக்கி யும் காணப்படுகிறது. மருங்கூர் அகழாய்வு தளத்தின் மேலுள்ள பண்பாட்டு மண் அடுக்கு, வரலாற்று காலத்தைக் குறிக்கும் வகையில் கி.பி. 10-11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாமன்னன் ராஜ ராஜனின் செப்பு நாணயம் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித் துள்ளனர்.