districts

டிச.18 முதல் ஜன.6 வரை மயிலாடுதுறையில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்கள்

மயிலாடுதுறை, டிச.17 - மயிலாடுதுறை மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன என்று மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், மயி லாடுதுறை நகராட்சி, சீர்காழி நக ராட்சி, குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பகுதிகளில் டிசம்பர் 18 முதல் ஜனவரி 6 வரை, காலை 10 மணி முதல் பிற்பகல் 3  மணி வரை இச்சிறப்பு முகாம் நடை பெற உள்ளது.  அதன்படி, டிச.18 அன்று மயிலாடுதுறை நகராட்சி, வார்டு-24,  25, 35, 36, 23, 17-க்கு மயிலாடு துறை புலியன் தெரு, வாசுகி திருமண  மண்டபத்திலும், குத்தாலம் பேரூ ராட்சி வார்டு-1, 2, 3, 10, 11, 12, 13,  14-க்கு குத்தாலம் சிதம்பரநாத முதலி யார் தெரு, அம்ரா திருமண மண்ட பத்திலும், டிச.19 அன்று மயிலாடு துறை நகராட்சி வார்டு-1, 2, 3, 4,  5, 6-க்கு மயிலாடுதுறை திருமஞ்சன  வீதி, கே.எஸ் திருமண மண்டபத்தி லும் நடைபெற உள்ளது. குத்தாலம் பேரூராட்சியில் வார்டு- 4, 5, 6, 7, 8, 9, 15-க்கு குத்தாலம் உத்திர  தெற்கு வீதி ஸ்டார் திருமண மண்ட பத்திலும், டிச.20 அன்று மயிலாடு துறை நகராட்சியில் வார்டு-26, 14, 15,  8, 7, 16-க்கு கூறைநாடு காசுக்கடைத் தெரு, ரத்தின திருமண மண்டபத்தி லும், மணல்மேடு பேரூராட்சியில் வார்டு-1, 2, 3, 4, 5, 11, 14, 15-க்கு  மணல்மேடு, மெயின் ரோடு எம்.ஏ.கே  திருமண மண்டபத்திலும் நடைபெறு கிறது. டிச.21 அன்று மயிலாடுதுறை நக ராட்சியில் வார்டு-29, 11, 10, 9, 12,  13, 28-க்கு மயிலாடுதுறை திருமஞ்சன  வீதி, பாலலட்சுமி திருமண மண்ட பத்திலும், மணல்மேடு பேரூராட்சி யில் வார்டு -6, 7, 8, 9, 10, 12, 13-க்கு  மணல்மேடு, ராதாநல்லூர் மெயின்  ரோடு, நிலவர் திருமண மண்டபத்தி லும், டிச.27 அன்று மயிலாடுதுறை நகராட்சியில் வார்டு-18, 22, 20, 19,  21-க்கு மயிலாடுதுறை கீழநாஞ்சில் நாடு பாலாஜி திருமண மண்டபத்தி லும், சீர்காழி நகராட்சியில் வார்டு-1,  9, 10, 21-க்கு சீர்காழி பனங்காட்டாங் குடி ரோடு, சுந்தரி அம்மாள் திருமண  மண்டபத்திலும் நடைபெறுகிறது. டிச.28 அன்று மயிலாடுதுறை நக ராட்சியில் வார்டு-30, 31, 27, 32,  33, 34-க்கு மயிலாடுதுறை, சாலியத் தெரு, தனியூர், பதிபாலா திருமண மண்டபத்திலும், சீர்காழி நகராட்சி யில் வார்டு-2, 8, 11, 12-க்கு சீர்காழி, தடாளன் கீழ வீதி, வெண்ணிலா திருமண மண்டபத்திலும், 2024 ஜன வரி 3 அன்று சீர்காழி நகராட்சியில் வார்டு-3, 4, 7, 14-க்கு சீர்காழி தடாளன் கீழவீதி, ரத்தினாம்பாள் திரு மண மண்டபத்திலும், தரங்கம்பாடி பேரூராட்சியில் வார்டு-1, 2, 3, 4, 5, 6,  7, 11, 12-க்கு தரங்கம்பாடி மெயின் ரோடு, ராஜா ராணி திருமண மண்ட பத்திலும் நடைபெற உள்ளது. ஜனவரி 4 அன்று சீர்காழி நகராட் சியில் வார்டு-5, 6, 15, 17-க்கு சீர்காழி,  

அண்ணா தெரு, சந்திரன் சகுந்தலா திருமண மண்டபத்திலும், தரங்கம் பாடி பேரூராட்சியில் வார்டு-8, 9, 10,  13, 14, 15, 16, 17, 18-க்கு தரங்கம்பாடி  சந்தைவெளித் தெரு, செல்வி மஹால் திருமண மண்டபத்திலும், ஜன.5 அன்று சீர்காழி நகராட்சியில் வார்டு-13, 16, 19-க்கு சீர்காழி தேர்  வடக்கு வீதி, நாடார் உறவின்முறை சங்கம் திருமண மண்டபத்திலும், வைத்தீஸ்வரன் கோயில் பேரூ ராட்சியில் வார்டு- 1, 2, 3, 6, 7, 8, 9,  15-க்கு வைத்தீஸ்வரன் கோயில் தெற்கு ரத வீதி, சரஸ்வதி திருமண மண்டபத்திலும் நடைபெறுகிறது. ஜனவரி 6 அன்று சீர்காழி நகராட்சியில் வார்டு - 18, 20, 22, 23,  24-க்கு சீர்காழி டி.ஓ.ரோடு, இரா ஜேஸ்வரி திருமண மண்டபத்தி லும், வைத்தீஸ்வரன் கோயில் பேரூ ராட்சியில் வார்டு- 4, 5, 10, 11, 12, 13, 14-க்கு வைத்தீஸ்வரன்கோயில் மயி லாடுதுறை மெயின் ரோடு, இந்திர பவன் மண்டபத்திலும் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் எரிசக்தி துறை, மின்சார வாரியம், நகராட்சி நிர்வா கம், குடிநீர் வழங்கல் துறை, வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்  துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற  வளர்ச்சித்துறை, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக  நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை, பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தாட்கோ, மாவட்ட தொ ழில் மையம் ஆகிய துறைகள் மூலம்  வழங்கப்படுகிற சேவையை தேவை யான ஆவணங்களை சமர்ப்பித்து பொதுமக்கள் பெறலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.