திருச்சியில் ஜனவரி 3 ஆம் தேதி அரசு விழா நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். விழாவையொட்டி கேர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் பணிகளை, அமைச்சர் கே.என்.நேரு, சக்கரபாணி ஆகியோர் ஞாயிறன்று நேரில் பார்வையிட்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.