ரத்த தான முகாம்
அரியலூர், டிச.29 - அரியலூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை யில் ரத்ததான முகாம் நடை பெற்றது. ஸ்பைஸ் உணவு டெலிவரி யின் 4 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நடை பெற்ற இந்த முகாமை போக்கு வரத்து காவல் ஆய்வாளர் எம். கார்த்திகேயன் தொடக்கி வைத்து பேசினார். அரியலூர் ரோட்டரி சங்கத் தலைவர் ஜி. கொளஞ்சி, செயலர் ஆர்.ஆனந்த், அரசு மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் ரமேஷ், மருத்துவர் ராஜரா ஜன், செஞ்சிலுவை சங்க உறுப்பினர் சகானா காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித் தனர். தன்னார்வலர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ரத்த தானம் வழங்கினர். அரியலூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் சந்திர சேகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், ரத்தங் களை சேகரித்தனர்.
எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு
அரியலூர், டிச.29 - அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப் புணர்வுக் கருத்தரங்கு புதன் கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அக்கல்லூரி யின் முதல்வர் டோமினிக் அமல்ராஜ் தலைமை வகித்து பேசினார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் ராஜசேகரன், வாழ் வினை தொற்று தடுப்பு, எச்.ஐ.வி, வாழ்க்கை திறன் கல்வி, காசநோய், எச்.ஐ.வி-யுடன் எவ்வாறு வாழ்வது என்பது குறித்தும், எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய் பரவல் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி எடுத்துரைத் தார். பால்வினை நோய் ஆலோ சகர் சுந்தரி, எய்ட்ஸ் நோயின் தாக்கம் பற்றி கலந்துரையாடி னார். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மருத்துவ முகாம்
பாபநாசம், டிச.29 - தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசத்தை அடுத்த கபிஸ்தலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மக்களை தேடி மருத்துவத்தின் சர்க்கரை நோயால் கண், பாதம் பாதித்தவர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. மருத்துவர்கள், கண் மருத்துவ உதவியாளர்கள் நோயாளி களுக்கு பரிசோதனை மேற் கொண்டனர். வட்டார மருத்துவ அலுவலர் தீபக், வட்டார சுகா தார மேற்பார்வையாளர் (பொ) செல்லப்பா, சுகாதார ஆய்வா ளர் நாடிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.
பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்
திருச்சி ஆட்சியர் தகவல்
திருச்சி ஆட்சியர் தகவல் திருச்சிராப்பள்ளி, டிச.29 - திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 11, 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 9.1.2024 அன்றும் (செவ்வாய்க்கிழமை), கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 10.1.2024 அன்றும் (புதன் கிழமை) திருச்சிராப்பள்ளி, டவுன்ஹால் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொள்வதற்குரிய படிவத்தை சரியாக நிறைவு செய்தும், தலைமையாசிரியர், முதல்வர், துறைத் தலைவரின் பரிந்துரை யுடனும் 5.1.2024 ஆம் தேதிக்குள் “துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, மாவட்ட ஆட்சியரகம், திருச்சிராப்பள்ளி – 620001” (தொலைபேசி எண்.0431-2401031) என்ற முக வரிக்கு நேரில், அஞ்சல், மின்னஞ்சலில் (tamilvalar.try@gmail.com) அனுப்ப லாம் அல்லது மாணவர்கள் போட்டிக்கு வரும் பொழுது நேரிலும் அளிக்கலாம். ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியி லிருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு மாணவர் வீதம் மொத்தம் 3 மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். போட்டிகளுக் குரிய தலைப்புகள் போட்டி தொடங்கு வதற்கு முன்னர் அறிவிக்கப்படும். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர் களுக்கு பரிசு காசோலையாக வழங்கப்படும். மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் மாண வர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டி களில் பங்குபெற பரிந்துரை செய்யப்படுவர் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
திருவெறும்பூர் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு
திருச்சிராப்பள்ளி, டிச.29 - திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி 41 ஆவது வார்டு, திருவெ றும்பூர் - நவல்பட்டு சாலையில் புதைவடிகால் திட்டப் பணி களுக்கு பள்ளம் தோண்டிய போது, அவ்வழியே செல்லும் காவிரி குடிநீர் குழாயில் வியாழக்கிழமை உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் சாலையில் வழிந்தோ டியது. இதை சீரமைக்கும் வரை, அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. மாநகராட்சி 41 ஆவது வார்டுக்கு உட்பட்ட கக்கன் காலனி, சுருளி கோவில் தெரு, சுப்பிரமணியபுரம், காந்தி நகர் 8 தெருக்கள், செல்வபுரம் ஆகிய பகுதிகளுக்கு குடி நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. குழாயை உடனடி யாக சரிசெய்து குடிநீர் விநியோகத்தை சீராக்குமாறு அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வங்கி பெண் ஊழியரை தாக்கி நகை கொள்ளை
திருச்சிராப்பள்ளி, டிச.29 - திருச்சி கே.கே.நகர் எல்.ஐ.சி காலனி ஐயப்பன் நகர் கட்டபொம்மன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மனைவி புஷ்பலதா (44). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனி யார் வங்கியில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவர் இரவு 8 மணியளவில் தனது மொபட்டில் சாத்த னூர் சாலை பகுதியில் சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலி பர்கள் அவரது தலையில் பலமாக தட்டியுள்ளனர். இதில் அதிர்ச்சியடைந்த அவர், வாகனத்தை நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்த போது, அவர் கழுத்தில் அணிந் திருந்த ஐந்து பவுன் செயினை பறித்தனர். அப்போது புஷ்ப லதா செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால், செயின் பாதியாக அறுந்தது. அதில் ஒரு பகுதியை கொள்ளையர்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து புஷ்பலதா கே. கே.நகர் குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
இணைய வழியில் வேலை: ரூ.1.22 லட்சம் மோசடி
தஞ்சாவூர், டிச.29 - இணைய வழியில் வேலை எனக் கூறி பெண்ணிடம் ரூ.1.22 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை காவல் துறை யினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூரைச் சேர்ந்த 27 வயது பெண்ணின் டெலி கிராம் மற்றும் வாட்ஸ்ஆப்பில் மே மாதம் வந்த தகவ லில், பகுதிநேர வேலை என விளம்பரம் இருந்தது. அதனு டன் வந்த லிங்கை அப்பெண் சொடுக்கி, உள்ளே சென்று பார்த்தார். அதில், ‘வீடியோக்களை அதிகளவில் பகிர்ந்தால், தங்களுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும்’ எனக் குறிப் பிட்டிருந்தது. இதை நம்பிய அப்பெண், இணைய வழியில் இருந்த வங்கிக் கணக்குக்கு ரூ.120 செலுத்தி, வீடியோக்களை பகிர்ந்ததன் மூலம் ரூ.200 லாபம் கிடைத்தது. இதை யடுத்து, ரூ.300 செலுத்திய அப்பெண்ணுக்கு ரூ. 800 லாபம் வந்தது. இதைத் தொடர்ந்து, பல தவணைகளாக ரூ.1,22,676 செலுத்திய அப்பெண்ணுக்கு பணம் திரும்பக் கிடைக்க வில்லை. பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் தஞ்சாவூர் இணையதளக் குற்ற காவல் பிரிவில் புகார் செய்தார். இதன்பேரில் காவல் துறையி னர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மக்களுடன் முதல்வர் முகாம் கரூர் மாநகராட்சியில் இடம் மாற்றியமைப்பு
கரூர், டிச.29 - கரூர் மாநகராட்சியில் நடைபெற இருந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 2023 டிச.18 முதல் 2024 ஜனவரி 6 வரை 50 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம், காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முகாம்கள் நடை பெற்று வருகிறது. கரூர் மாநகராட்சியில் 16 நாட்கள் 16 இடங்களிலும், 3 நக ராட்சிகளில் 9 நாட்கள் 13 இடங்களிலும், 8 பேரூராட்சி களில் 7 நாட்கள் 16 இடங்களிலும், மாநகராட்சியை ஒட்டி யுள்ள புறநகர்ப் பகுதிகளில் 5 நாட்கள் 5 இடங்களிலும் நடை பெறுகின்றன. டிச.30 அன்று கரூர் மாநகராட்சியில் பசுபதிபா ளையம் ராயல் திருமண மண்டபத்தில் வார்டு எண். 12,17,19–க்கு நடைபெற இருந்த முகாம், நிர்வாக கார ணங்களால் பின்வருமாறு மாற்றிய அமைக்கப்பட்டு உள்ளது. டிச.30 அன்று கரூர் மாநகராட்சியில் பசுபதிபாளையம் சந்தோஷ் மஹாலில் வார்டு எண்.12,17,19-க்கும், குளித் தலை நகராட்சியில் வாசவி மஹாலில் வார்டு எண். 10,11,12,13,23,24–க்கும், மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இச்சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் பொது மக்கள் தங்களது பகுதிக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில், குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் தங்களது கோரிக்கை மனுவை அளிக்கலாம் என ஆட்சியர் மீ.தங்கவேல் தெரி வித்துள்ளார்.
விவசாயிகளுக்குப் பயிற்சி
தஞ்சாவூர், டிச.29 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரம், கங்காதரபுரம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவ சாயிகளுக்கு தீவனப்புல் மேலாண்மை மற்றும் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் மோ.சுரேஷ் வரவேற் றார். சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜி.சாந்தி, குருவிக்கரம்பை கால்நடை உதவி மருத்துவர் அகிலா அருணாசலம், சேதுபாவாசத்திரம் துணை வேளாண்மை அலுவலர் து.சிவசுப்பிரமணியன் ஆகியோர் தீவனப்பயிர் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து உரையாற்றினர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவ லர்கள் ஆ.தமிழழகன், சி.ஜெயக்குமார், தொகுதி உதவி வேளாண்மை அலுவலர் எம்.அனுசியா ராஜ், பயிர் அறு வடை பரிசோதனை அலுவலர் ஆர.சுவாதி ஆகியோர் செய்திருந்தனர்.
நுண்ணீர்ப் பாசனத்தில் அதிக மகசூல் பெறலாம்
புதுக்கோட்டை, டிச.29 - விவசாயிகள் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம். துளி நீரில் அதிக பயிர்கள் திட்டத்தில் சொட்டு நீர்ப் பாசனம் மற்றும் தெளிப்புநீர்ப் பாசனம் அமைத்து குறைந்த நீரில் அதிக மகசூல் பெறலாம். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவிக்கையில், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்-துளி நீரில் அதிக பயிர்கள் திட்டத்தில் நுண்ணீர்ப் பாசனக் கருவிகள் அமைத்திட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டிற்கு அரசிடமிருந்து 800 ஹெக்டேர் பரப்பிற்கு பதிவு செய்திட இலக்கு பெறப்பட்டு, முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு சொட்டு நீர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் www.tnhorticulture.tn.gov.in என்ற வலைதளத்தில் எம்ஐஎம்ஐஎஸ் என்ற இணைப்பில் பதிவு செய்யலாம் அல்லது விவசாயிகள் தங்கள் பகுதியின் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கணினிச் சிட்டா, அடங்கல், சிறு-குறு விவசாயி சான்று, ஆதார் அட்டை நகல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மண் மற்றும் நீர்ப் பரிசோதனை மாதிரி முடிவுகள் போன்ற ஆவணங்களைக் கொடுத்து இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நுண்ணீர் பாசனம் அமைப்பதால் ஏற்படும் பயன்கள், குறைந்த நீரில் அதிக சாகுபடி பரப்பு மேற்கொள்ளலாம். களைகள் எளிதாக கட்டுப்படுத்துகிறது. உரம் செலுத்துவது எளிதாகிறது. நிலக்கடலை மற்றும் பயறுவகை பயிர்களுக்கு தெளிப்பு நீர் நன்கு பயனளிக்கிறது. கரும்பு, மக்காச்சோளம் ஆகிய பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்திடலாம். சொட்டுநீர் பாசன அமைப்பின் மூலம், சாகுபடி செய்யும் பயிர்களுக்கு உரம் செலுத்தும் அமைப்பின் வழியாக உரங்களை எளிதாகவும், விரயமின்றி, வேர் பகுதிக்கு அருகில் செலுத்த முடியும். இதனால் உரச்செலவு குறைகிறது. பயிரின் வளர்ச்சியும் சீராக இருப்பதால், குறைவான செலவு மற்றும் குறைவான நீர் பயன்பாட்டில் கூடுதல் மகசூல் மற்றும் லாபம் கிடைக்கிறது” என்றார்.