கரூர், ஆக.24 - கரூர் மாவட்டம் பரணி பார்க் கல்விக் குழுமத்தில் வெள்ளி விழா ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் பரணி வித்யாலயா பள்ளியின் பிரித்வி அணி, பரணி பார்க் பள்ளியின் சேரன் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். இவ்விழாவிற்கு பரணி கல்விக் குழும தாளாளர் எஸ்.மோகனரங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரங்கன் வரவேற்று பேசினார். அறங்காவலர் சுபாஷினி அசோக் சங்கர் முன்னிலை வகித்தார். கரூர் மாவட்ட வருவாய் அலுவ லர் எம்.கண்ணன் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசு வழங்கி சிறப்புரை யாற்றினார். பரணி பார்க் கல்வி குழு மத்தின் முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்பிரமணியன், பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் தமிழ்நாடு சார ணர் அமைப்பு ஆணையர் ஜெ.சக்தி வேல், தமிழ்நாடு சாரணர் பயிற்சி ஆணையர் எஸ்.நாகராஜன், தமிழ்நாடு சாரணியர் அமைப்பு ஆணையர் கே. கோமதி, தமிழ்நாடு சாரணியர் பயிற்சி ஆணையர் எம்.தேன்மொழி ஆகி யோர் கலந்து கொண்டனர். பரணி பார்க் கல்வி நிறுவனங்களில் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டது. இதில் பரணி வித்யாலயா பள்ளி அக்னி, வாயு, பிரித்வி, ஆகாஷ் என 4 அணிகளாகவும், பரணி பார்க் பள்ளி சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என 4 அணி களாகவும் பிரிக்கப்பட்டு பள்ளி அணிகளுக்கிடையே போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் இறுதி போட்டிகள் சனிக் கிழமை காலை பரணி கல்வி வளா கத்தில் நடைபெற்றது. அணிகளின் உறுதிமொழி, வண்ணமயமான அணி வகுப்பு, ஒலிம்பிக் சுடர் ஓட்டம், ஓட்டப் பந்தயம், சிலம்பம், ஸ்கேட்டிங், மாஸ் டிரில், யோகா, கராத்தே, சார ணர்களின் முதலுதவி பயிற்சி, தேசிய மாணவர் படை செயல்முறை, விளை யாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பேண்ட் செயல்முறை, லெசிம் நாட்டுப்புற நடன நிகழ்ச்சி ஆகியவை சிறப்பாக நடைபெற்றன. இறுதிப் போட்டியில் பரணி வித்யா லயா பள்ளியின் பிரித்வி அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. பரணி பார்க் பள்ளியின் சேரன் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. பரணி வித்யா லயா பள்ளி முதல்வர் எஸ்.சுதாதேவி நன்றி கூறினார்.