districts

img

செல்லப்பிள்ளை திட்டம் புதுக்கோட்டை ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை, ஜூன் 17-  

    புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில், செல்லப் பிள்ளை திட்டம் குறித்து, மாவட்ட ஆட்சி யர் ஐ.சா.மெர்சி ரம்யா  ஆய்வு மேற் கொண்டார். பின்னர் ஆட்சியர் தெரி வித்ததாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருங் கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டம் மூலமாக பிரசவித்த தாய்மார் களுக்கு தாய்ப்பாலின் அவசியம், தாய்ப்பால் கொடுக்கும் முறை, சீம்பா லின் முக்கியத்துவம், பச்சிளம் குழந்தை பராமாரிப்பு, பாலூட்டும் தாய் மார்களுக்கான உணவு, சரியான குழந்தை வளர்ப்பு திறனை மேம்படுத் துதல் போன்ற ஆலோசனைகள் அளித் தல் போன்ற பணிகளை மேற்கொள்ள  ‘செல்லப்பிள்ளை” எனும் ஆலோசனை மையம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இராணியார் அரசு மகப் பேறு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது

   தற்போது வரை 135 வேலை நாட்க ளில், 4,276 பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்களுக்கு செல்லப்பிள்ளை திட்டம் மூலமாக குழந்தை பராமரிப்பு  ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இங்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்தான இணை உணவு கொழுக் கட்டைகள் மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவு பொருட்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளரச்சிப் பணிகள் திட்டம் மூலமாக வழங்கப்படுகிறது என்றார்.

   ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிச் திட்ட அலுவலர் புவனேஸ்வரி,  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருக்கை மருத்துவர் மரு.இந்தி ராணி, கண்காணிப்பாளர் (பொ) மரு. ராஜ்மோகன், வட்டாட்சியர் விஜய லெட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.