தேர் திருவிழா பட்டியலின மக்களிடம் வரி வசூல் செய்ய மறுப்பு
திருச்சிராப்பள்ளி,பிப்.23- திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் அய்யம் பட்டியில் உள்ள கத்தோலிக்க தேவாலய தேர்த் திருவிழா 2022-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது தலித் கிறிஸ்தவர்களிடம் வரி வசூலிக்காமல் விட்டுவிட்டனர். பின்னர் அய்யம்பட்டி பங்குத் தந்தை யிடம் நேரில் முறையிட்டதால் எங்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு வரி வசூலிக்குமாறு சம்மந்தப்பட்டவர் களுக்கு அறிவுறுத்தினார். ஆனால்,. வரி வசூலிக்க மறுத்து விட்டனர். இப்பிரச்சனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பாகுபாடு குறித்து வாடிகனில் உள்ள போப் ஆண்டவர் மற்றும் ஒன்றிய- மாநில அரசு அதிகாரி களுக்கு புகார் அனுப்பவிருப்பதாக தமிழக மக்கள் நலக் கட்சியின் மாநிலப் பொருளாளர் தாஸ் பிரகாஷ் வியா ழனன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சிறைவாசிகளுக்கு பல் மருத்துவ முகாம்
புதுக்கோட்டை, பிப்.23- புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளி மற்றும் மாவட்டச் சிறையில் சிறைவாசிகளுக்கு பல் மருத்துவ சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளி மற்றும் மாவட்ட சிறைக்கண்கா ணிப்பாளர் சி.கிருஷ்ணகுமார் முன்னிலையில் நடை பெற்ற முகாமில் சிறப்பு பல் மருத்துவர் அஜய் பிரவீன் தலைமையில் உதவி மருத்துவர்கள், சிறையின் மருத்துவ அலுவலர்கள், மருத்துவப் பணியாளர்களால் பல் தொடர்பான சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கி னர். இதன் மூலம் 75 க்கும் மேற்பட்ட சிறைவாசிகள்- சிறைப்பணியாளர்கள் பயன் பெற்றனர்.
குடவாசலில் “தமிழ்க் கனவு” நிகழ்வு
திருவாரூர், பிப்.23- திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் மஞ்சக்குடி யில் சுவாமி தயானந்தா தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்க் கனவு என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமை உரையாற்றினார். மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெய ரஞ்சன் “வளர்ச்சியை ஜனநாயகப்படுத்துதல்” என்ற தலைப்பிலும் கவிஞரும் பாடல் ஆசிரியருமான க.ப.யுக பாரதி “மனத்க்கண் மாசிலான்” என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றினார். நிகழ்வில் பேசிய ஆட்சியர்,தமிழரின் மரபு. நாகரி கம், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு. சமூக பொருளா தார முன்னேற்றம், திசைதோறும் திராவிடம், மொழி மற் றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு. தொள்ளியியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம். தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவுகள். வாய்ப்புகள், கல்வி மற்றும் கல்வி புரட்சி, அரசின் திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்கு கொண்டு செல் லும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவ, மாண விகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டிப் புத்தகம் வழங்கப்பட்டது. கல்லூரி தாளாளர் எம்.ஜி.சீனிவாசன், கோட்டாட்சி யர் அ.நா.சங்கீதா,குடவாசல் வட்டாட்சியர் தி.குருநாதன் மாவட்டத்திலுள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் நிகழ் வில் கலந்துகொண்டனர்.
கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை
பெரம்பலூர், பிப்.23- பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் நடுத் தெருவைச் சேர்ந்த தம்பதியினர் தியாகராஜன் (78), இவரது மனைவி பானுமதி (72). இருவரும் வீட்டருகே பெட்டிக்கடை வைத்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் கதிரேசன் விழுப்புரம் மாவட்டம் உளிபுரம் கிராமத்தில் சொந்தமாக சோடா கம்பெனி வைத்துள் ளார். மகள் கவிதா அ.மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சின்ன சாமி என்பவருடன் திருமணமாகி வசித்து வருகிறார். இந்த நிலையில், வியாழனன்று நீண்ட நேரம் ஆகி யும், தியாகராஜன்-பானுமதி தம்பதியினர், வீட்டை விட்டு வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர், சந்தேகம டைந்து, கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, வீட்டு சீலிங் பேனில், ஒரே சேலையில், இருவரும் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தியதில், பானுமதிக்கு கடந்த ஆறு வருடங்க ளாக உயிர்நிலையில் கேன்சர் வியாதி இருந்து வந்ததாக வும், அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கடந்த 15 நாட்க ளாக மிகவும் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படு கிறது. நோயின் கொடுமை தாங்க முடியாமல் கணவன் மனைவி இருவரும் ஒரே சேலையில் ஒன்றாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணை யில் தெரியவந்துள்ளது. பெரம்பலூர் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
அரியலூர்: வளர்ச்சித் திட்டப் பணிகள் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
அரியலூர், பிப்.23- அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலு வலர் ரமேஷ்சந்த் மீனா கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, பள்ளி மாணவர்கள் விடுதிகள், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். தொடர்ந்து, மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணி, பள்ளிகளில் கழிவறை கட்டும் பணி, சிமென்ட் சாலை அமைக்கும் பணி என ரூ.1.43 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய் தார். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தினார். ஆய்வின்போது ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் ஆனந்த், உதவித்திட்ட அலுவலர் தமிழ்மணி உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பு மருத்துவ முகாம்
தஞ்சாவூர், பிப்.23- தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பல்நோக்கு உயர் சிகிச்சைபி பிரிவில், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் அமைப்பும் இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடத் தின. மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் துவக்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில், முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் மூன்று கட்டமாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தஞ்சாவூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் நடை பெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் சிறு நீர்ப்பை பாதிப்பு தொடர்பான நவீன சிகிச்சை, ரத்த வகை கண்டறிதல், கண் மற்றும் பல் பரிசோதனை உள்ளிட்ட சிகிச் சைகள் அளிக்கப்பட்டன. தகுந்த ஆலோசர்களால் மறுவாழ்வு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 40 பேர் பயனடைந்த னர். படுக்கை புண்ணால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உடனடியாக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மூன்று பேருக்கு தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்தச் சிறப்பு மருத்துவ முகாமில் எலும்பு முறிவு சிகிச்சை, மூளை நரம்பியல் மருத்துவம் மற்றும் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை ஆகியவற்றிற்கு சிறப்பு நிபு ணர்கள் சிகிச்சை அளித்தனர். இரண்டாம் கட்டமாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மார்ச் 9-ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக கும்பகோ ணம் அரசு மருத்துவமனையில் மார்ச் 23-ஆம் தேதியும், முதுகுத் தண்டுவடம் பாதிக கப்பட்டவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
பட்டா மாறுதலுக்கு கூடுதல் பணம் கேட்பதாக மக்கள் குற்றச்சாட்டு
அரியலூர், பிப்.23- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டத்தில் இடங்கள் (நிலம்) வாங்குபவர்கள். அதற்கு ரிஜிஸ்டர் செய்யும் போது சர்வே செய்து தனிப் பட்டா மாற்றத்திற்கான தொகையையும் சேர்த்து பத்திரப்பதிவு அலு வலகத்தில் செலுத்துகின்றனர். இருப்பி னும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அந்த இடத் தைப் பட்டா மாற்றம் செய்து கொடுக்க ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை லஞ்சம் கேட்பதாக குற்றம் சாட்டுகின்றனர் மக்கள். காசு கொடுத்தவர்கள் கூறியதாவது: ஜெயங்கொண்டதைச் சேர்ந்த பாலு, ராஜேஷ், செல்வகணபதி மற்றும் சில ரிடம் இடத்திற்கு தனிப் பட்டா மாற்ற ஜெயங் கொண்டம் கிராம நிர்வாக அலுவலக உத வியாளர் ஒருவர் கிராம நிர்வாக அலுவலர் கேட்டதாகக் கூறி தில்லை நகரில் உள்ள இடம் ஒன்றுக்கு தலா 5 ஆயிரம் வீதம் ரூ. 25 ஆயிரம் கேட்டுள்ளதாக தெரிவிக்கின்ற னர். பலருக்கு பணம் கொடுக்க வேண்டி யுள்ளது. எனவே பணம் தேவை நிர்ப் பந்திக்கின்றனர். வசதி படைத்தவர்கள் பணம் கொடுத்து பட்டா மாற்றம் செய்து விடலாம் ஏழை, எளிய மக்களால் எப்படி பட்டா மாற்றம் செய்ய முடியும். மாவட்ட நிர்வாகம் இப் பிரச்சனையில் தனிக்கவனம் செலுத்தி பணம் கேட்டு நச்சரிப்பவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒரு சிலர் செய்யும் தவறால் ஒட்டு மொத்த கிராம நிர்வாக அலுவலர்கள் சர்வே யர் உள்ளிட்ட மேலதிகாரிகள் தலை குணி வை சந்திக்க வேண்டியுள்ளது என புலம்பு கின்றனர் நேர்மையான ஊழியர்கள். (ந.நி.)