districts

img

வருவாய்த் துறை அலட்சியத்தால் ஆவணங்கள் மாற்றம் ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டம்

தஞ்சாவூர், மே 10-  

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே களத்தூர் ஊராட்சியில், களத்தூர் கிழக்கு, மேற்கு என இரண்டு கிராமம் உள் ளது. தற்போது, களத்தூர் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்களுக்கு சொந்தமான வயல், தோப்பு, வீட்டுமனை என் பன உள்ளிட்ட சுமார் 250 ஏக்கர் நிலத்தின் கிரயப்பத்திரம், பட்டா, கணினி சிட்டா, வீட்டு வரி ரசீது ஆவணங்களில் களத்தூர் மேற்கு என பதிவாகியுள்ளது.

   இந்நிலையில், களத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியான சூரியநாராயணபுரம் கிராமத்து டன், களத்தூர் மேற்கு பகுதியில் உள்ள சுமார் 184.62 ஏக்கர் நிலத்தை இணைப்பதாக வருவாய்த்துறை யினர் அறிவித்துள்ளனர்.  

   மேலும், கடந்த சில மாதங்க ளாக, ஆன்லைன் சிட்டாவையும் நிறுத்தி வைத்துள்ளனர். இத னால், ஏற்பட்ட குளறுபடியால், விவ சாயிகள், பொதுமக்கள் வங்கிக் கடன், கல்விக் கடன் வாங்க முடி யாமலும், நில ஆவணங்களை பதிவு செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர்.

  இது தொடர்பாக, வருவாய்த் துறையினர் உடனடியாக நட வடிக்கை எடுத்து, பழைய முறைப்  படி தங்கள் கிராமத்தின் பெயரி லேயே இந்த நிலங்களுக்கான சிட்டா வழங்க வேண்டும் என வலி யுறுத்தி களத்தூர் கிராம கமிட்டி செயலாளர் மாறன், தலைவர் கண்  ணன், முன்னாள் ஊராட்சி மன்றத்  தலைவர் முருகன் ஆகியோர் தலை மையில், தஞ்சாவூர் ஆட்சியர் அலு வலகம் முன்பு, ரேஷன், ஆதார்,  வாக்காளர் அட்டை ஆகியவற்றை ஒப்படைப்பதாக கூறி புதன்கிழமை யன்று போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட  பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

   பின்னர், கோரிக்கை மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் சம்பந் தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அளித்தனர்.