சிவகங்கை, ஆக.11-
தமிழகம் முழுவதும் காவல்துறை சார்பு ஆய்வா ளர் தேர்வு. டைப்ரைட்டிங் தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளும் ஆகஸ்ட் 26 அன்று நடைபெறு கின்றன.
இதனால் இரண்டு தேர்வுகளை எழுதும் இளைஞர்கள் பாதிப்ப டைவார்கள்.எனவே வெவ் வேறு தேதிகளில் தேர்வு களை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் சுரேஷ் தமிழக முதல மைச்சருக்கு மனு அனுப்பி யுள்ளார்.
அந்த மனுவில், காவல் துறை சார்பு ஆய்வாளர் தேர்வு. டைப்ரைட்டிங் தேர்வை எழுத லட்சக் கணக்கான இளைஞர்கள் தயாராகி வருகிறார்கள். தமிழக முதல்வர் உடனே தலையிட்டு ஏதாவது ஒரு தேர்வை வேறு தேதிக்கு மாற்றி அனைவரும் இரண்டு தேர்வுகள் எழுதும் வாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.