districts

img

கல்வெட்டு வாசிப்புப் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

புதுக்கோட்டை, பிப்.15- சுற்றுலாத்துறையின் சார்பில், தமிழிஃஇடைக் கால தமிழ் எழுத்துகள் மற்  றும் கல்வெட்டு வாசிப்பு  பயிற்சி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசி ரியர்கள், பத்திரிகையா ளர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா  ராமு பாராட்டுச் சான்றி தழ்களை வழங்கினார்.  உலக சுற்றுலா தினத்தை  முன்னிட்டு, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  29, 30 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டை பிரகதாம்  பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்களுக்கு தமிழ்ஃஇடைக்கால தமிழ் எழுத்துகள் மற்றும் கல்  வெட்டு வாசிப்புப் பயிற்சி யை காரைக்குடி பல்க லைக்கழகப் பேராசிரியர் இராசவேலு, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன், தலைவர் கரு.இராஜேந்தி ரன், அருங்காட்சியக ஓய்வு பெற்ற உதவி இயக்குநர் ஜெ.ராஜாமுகமது ஆகி யோர் வழங்கினார்.  பயிற்சியில் பங்கேற்று பயிற்சி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா  ராமு பாராட்டுச் சான்றி தழ்களை வழங்கினார். மாவட்ட சுற்றுலா அலுவலர் பே.முத்துசாமி, தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மணிகண்டன், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.