districts

img

பெரியார் மணியம்மை நிறுவனத்தில் ரோபாடிக்ஸ் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்

தஞ்சாவூர், மார்ச்.2 -  தஞ்சாவூர் அருகே வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் ரோபோட்டிக் பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வெ.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், பல்கலைக்கழக பதிவாளர் பி.கே.ஸ்ரீவித்யா ஆகியோர் பேசினர்.  தொடர்ந்து, திருச்சி, வெட்டிக்காடு, ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு வருடமாக, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் ரோபோடிக்ஸ் துறை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்த 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயின்ற 917 மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.  முன்னதாக கணினி மற்றும் அறிவியல் துறை முதன்மையர் ஷர்மிளா பேகம் வரவேற்றார். ரோபோடிக்ஸ் பயிற்சியாளர் திவ்யா நன்றி கூறினார்.