districts

மத்திய பணியாளர்கள் தேர்வாணைய தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் கரூர் ஆட்சியர் தகவல்

கரூர், ஏப்.17- மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் 7,500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கான தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் மரு.த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

இப்பணிக்காலியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணை யதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண் ணப்பிக்க கடைசி நாள் 03.05.2023 மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 04.05.2023 ஆகும்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன.

 இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும்  பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர்  கற்றல் இணையதளத்தில் (https//tamilnadu careerservices.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  

எனவே, இத்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்  நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு  கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.