districts

img

உள்நாட்டு நாய் இனங்களின் இனப்பெருக்க பாதுகாப்பு மையம்

 சென்னை, பிப்.29 நாட்டின நாய்களின் மரபணுக் களை பெருக்கும் வகையில், சென்னை, சைதாப்பேட்டை நாய் வளர்ப்பு பிரிவில் ரூ.5 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட வுள்ள உள்நாட்டு நாய் இனங்களின்  இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு மையத்தின் விரிவாக்கக் கட்டடத் திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். சிறந்த இனப்பெருக்க நாட்டு நாய்களை செல்லப்பிராணி வளர்ப்பாளர்களுக்கு வழங்கு வதற்கு இந்த மையம் உதவிடும். தலைமைச் செயலகத்தில் இருந்து  காணொலி வாயிலாக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின்  கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ. 14 கோடியே 14 லட்சத்து 86 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார். சென்னை, சைதாப்பேட்டை நாய் வளர்ப்பு பிரிவில் ரூ.5 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள உள்நாட்டு நாய் இனங்களின் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு மையத்தின் விரிவாக்கக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். புதுக்கோட்டை, மாவட்டத்தில் 3 கோடியே 25 லட்சம் செலவில்  புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த இணை இயக்குநர் மற்றும் உதவி  இயக்குநர் அலுவலகக் கட்டடம் மற்றும் இலுப்பூர் உதவி இயக்குநர்  அலுவலகக் கட்டடம், தேனி மாவட்டத்தில் ரூ.3 கோடியே 25 லட்சம் செலவில் தேனியில் ஒருங்கிணைந்த இணை இயக்கு நர் மற்றும் உதவி இயக்குநர் அலுவலகக் கட்டிடம் மற்றும் உத்தம பாளையம் உதவி இயக்குநர் அலுவலகக் கட்டடம், சென்னை மாவட்டம், சைதாப் பேட்டையில் 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை பன்முக மருத்துவமனைக் கட்டடம்; அரியலூரில் ரூ.1 கோடியே 15 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை நோய் புலனாய்வு பிரிவுக் கட்டடம்; கரூர் மாவட்டம், குளித்தலையில் ரூ.1 கோடியே 40 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள உதவி இயக்குநர் அலுவலகக் கட்டடம் மற்றும் கால்நடை மருந்தகக் கட்டடம்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கால்நடைப் பண்ணையில் ரூ. 2 கோடியே 9 லட்சத்து 36 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள இனவிருத்தி காளைகளை தனி மைப்படுத்துதலுக்கான கட்டடம்; என மொத்தம் ரூ. 14 கோடியே 14 லட்சத்து 86 ஆயிரம் செல வில் கட்டப்பட்டுள்ள கால்நடை பராமரிப்புத் துறைக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கால்நடை பராமரிப்பு துறை கூடுதல்  தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் எஸ்.அமிர்த ஜோதி  ஆகியோர் கலந்து கொண்டனர்.