அரியலூர், செப்.1- அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டத் தில் குறுவட்ட அளவிலான விளை யாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டி களை மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முருகேசன் ஆகியோர் கொடி யசைத்து தொடக்கி வைத்தனர். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடை பெற்றன. இப்போட்டியில் 30 பள்ளி களில் இருந்து 600 மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன்னதாக ஒலிம்பிக் கொடியை மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனி னும், குறுவட்ட கொடியை அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் எஸ். எம்.சந்திரசேகரனும் ஏற்றினர். ஜெயங்கொண்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற போட்டியை சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். வெற்றிப் பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமை வகித்தார்.