districts

img

தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி-கருத்தரங்கம்

புதுக்கோட்டை, பிப்.15- புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி இணைந்து தொழில்நெறி வழி காட்டும் கண்காட்சி மற்றும் கருத்த ரங்கை மன்னர் கல்லூயில் புதன் கிழமை முதல் நடத்தி வருகிறது. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  கண்காட்சி- கருத்தரங்கைத் தொடங்கி வைத்து,  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றி தழ்களை வழங்கினார். போட்டித் தேர்வுகளுக்கு தேவையான புத்த கங்கள், பயிற்சிக் கையேடுகள், மாதிரி வினாத்தாள்கள், வேலை வாய்ப்புகள் குறித்த புத்தகங்கள்  கண்காட்சிகளாக அமைக்கப்பட்டி ருந்தன.  தினம் ஒரு நிகழ்ச்சி என்ற தலைப்  பில் திங்கள் முதல் வெள்ளிவரை  பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்து வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலு வலர்- ஆதிதிராவிடர் மற்றும் பழங்  குடியினர் நல அலுவலர் அரசின் திட்டங்கள் குறித்தும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் போட்டித்  தேர்வுகளும் அதற்கான பயிற்சிகள்  குறித்தும், மாவட்ட தொழில் மைய  துணை இயக்குநர் மாணவர் களுக்கான சுயதொழில் வாய்ப்புகள் குறித்தும், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.  நிகழ்வில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்கள் மோ.மணி கண்டன், பெ.வேல்முருகன், மாவட்ட  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல அலுவலர் கி.கருணாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்  றும் சிறுபான்மையினர் நல அலு வலர் ஜி.அமீர், மன்னர் கல்லூரி முதல்வர் சி.திருச்செல்வம், முன் னாள் படைவீரர் நல அலுவலர் விஜய குமார், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.