புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் சார்பில் தன்னார்வலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி பாபநாசம் வட்டார வள மையத்தில் நடைபெற்றது. பயிற்சியை வட்டார கல்வி அலுவலர் மணி கண்டன் தொடங்கி வைத்தார். மரு.கனிமொழி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு முருகன் ஆகியோர் பங்கேற்றனர். தன்னார்வலர்களுக்கு எழுதுப் பொருட்கள் வழங்கப்பட்டன.