திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சி தேர்தலில் 5-வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி.பி.நல்லுசாமி புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் சிவா ஆகியோரை சந்தித்து டி.பி.நல்லுசாமி வாழ்த்து பெற்றார்.