திருச்சிராப்பள்ளி, ஜூன் 10-
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவ் நகர் அருகில் ஏபிடி பார்சல் நிறுவனம் உள்ளது. இங்கு உள்ள பணிமனையில் கடந்த 20 வருடங்களாக 8 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 7 தொழிலாளர்களை சேலம் மாவட்டத்திற்கு இடமாற் றம் செய்துள்ளனர். இது குறித்து நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித பதி லும் அளிக்காததை கண்டித் தும், இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி யும், சிஐடியு ஏபிடி பார்சல் சர்வீஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் சனிக்கிழமையன்று ஏபிடி பார்சல் சர்வீஸ் நிறு வனம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகி முருகன் தலைமை வகித்தார். கிளைத் தலை வர் ரவிச்சந்திரன், கிளைச் செயலாளர் சண்முகம், ராக வன் ஆகியோர் விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.