பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறி அஞ்சல்துறை (என்.இ.பி.இ) சம்மேளனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்த ஒன்றிய அரசைக் கண்டித்து இன்சூரன்ஸ், பிஎஸ்என்எல், வங்கி, ரயில்வே, மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்கள், சிஐடியு சார்பில் திருச்சிராப்பள்ளி தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க துணைத் தலைவர் ஜோன்ஸ், என்எப்பிஇ திருச்சிராப்பள்ளி பொறுப்பாளர் சிவ,சுப்பிரமணியன், குணசேகரன். டி.ஆர்.இ.யு கரிகாலன், ஜி.இ.சி ராஜ மகேந்திரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, என்.எப்.பி.இ, சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், செல்வம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.