கரூர், நவ.8 - தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) கரூர் மாவட்ட ஆண்டு பேரவை கூட்டம் சுங்க கேட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் கரூர் மாவட்டத் தலைவர் எம். மேகநாதன் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் என்.கண்ணதாசன் வேலை அறிக்கையை முன்வைத் தார். மாநில செயற்குழு உறுப் பினர் வி.சுப்ரமணியன் பேர வையை துவக்கி வைத்து பேசினார். சிஐடியு மாவட் டச் செயலாளர் சி.முருகே சன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செய லாளர் க.தனபால் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நகரக் குழு உறுப்பினர் மணி கண்டன் நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாவட்டத்தின் புதிய தலைவ ராக கே.கென்னடி, செயலா ளராக என்.கண்ணதாசன், துணைத் தலைவர்களாக மேகநாதன், பழனிச்சாமி, துணை செயலாளர்களாக ரதி, செல்வராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கேங்மேன் ஊழியர் களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஒப்பந்த மற்றும் பகுதிநேர ஊழியர்களை பணி நிரந்த ரம் செய்ய வேண்டும். மின் வாரியம் தனியார் மயமாக் கப்படுவதை கைவிட வேண் டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை புகுத்தும் முறையை ரத்து செய்ய வேண்டும். கரூர் மாவட்டத்தில் மின் வாரிய அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்க ளில் பெண்கள் அதிக அள வில் வேலை செய்து வரு கின்றனர். அவர்களுக்கு கரூர் மாநகரில் காலை மற்றும் மாலை நேரங்களில் முக்கிய வழித்தடங்களில் மகளிர் பேருந்து இயக்க வேண்டும். கரூர் மாநக ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை, புதிய சாலைகளாக மாற்றி யமைக்க வேண்டும். கரூர் பேருந்து நிலை யத்தில் ஒரு பகுதியில் கடை களை இடித்து தரை மட்ட மாக்கி உள்ளனர். இதனால் பயணிகள் மழை, வெயி லில் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். பயணிகள் நிழற்குடையை அதிகப் படுத்த வேண்டும். நவீன கழிப்பறைகளை அமைக்க வேண்டும். பகல் நேரத்தில் கரூரிலிருந்து சென்னைக்கு புதிய ரயில் இயக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.