districts

img

நிரந்தர பணிவாய்ப்பை பாதிக்கும் அரசாணையை ரத்து செய்திடுக!

தஞ்சாவூர், பிப்.21-  போக்குவரத்து துறையில், அத்துக் கூலி, ஒப்பந்த முறையில் பணியாளர் களை நியமிக்கக் கூடாது. நிரந்தர பணி யிடங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். நிரந்தர பணி  வாய்ப்பை பாதிக்கும் அரசாணை எண்-322 ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தஞ்சாவூர் அரசுப் போக்குவரத்துக் கழக  நகரப் பணிமனை முன்பு ராமசாமி தலை மையிலும், விரைவுப் போக்குவரத்துக் கழக  பணிமனை முன்பு பணிமனை தலைவர் செங்குட்டுவன் தலைமையிலும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  விரைவு போக்குவரத்து கழக சிஐடியு  மாநில துணைத்தலைவர் எஸ்.வெங்க டேசன், ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்பா ளர் என்.குருசாமி, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, ஜீவா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.