திருச்சிராப்பள்ளி, ஜூன் 23 - டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரப் படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். நிர்வாகத்திற்கு போட்டியாக மாவட்டத்திற்கு ஒருவரை நியமித்து ஊழியர்களை மிரட்டுவது, தாக்குவது, இடம் மாறுதல் செய்வது, கடையை மூடுவது போன்ற அத்துமீறலில் ஈடுபடு வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். துறை அமைச்சரின் ஆதரவா ளருக்கு ஒத்துப்போகாத ஊழியர்களை பணியிட மாறுதல் செய்திருப்பதை ரத்து செய்ய வேண்டும். தொழிற்சங்க நிர்வாகிகள் மீதான பணி இடமாறுதல் உள்ளிட்ட பழிவாங் கல் நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும். ஆளுங்கட்சியினர் துறை அமைச்சரின் சிபாரிசின் பேரில் வழங்கப் பட்ட முறைகேடான இடமாறுதல்களை ரத்து செய்து வெளிப்படையான சுழற்சி முறை பணியிட மாறுதலை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, டிடிபிடிஎஸ், டிஜிடிஇயு, ஏஐசிசிடியு டாஸ்மாக் ஊழியர் சங்கங்களின் திருச்சி மண்டலம் சார்பில் வியாழனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி டாஸ்மாக் அரசு பணியாளர் சங்க மாநிலப் பொரு ளாளர் அருள்மொழி, அரசு பணியாளர் ஒன்றியம் ரமேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் திருச்சி மண்ட லத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.