கும்பகோணம், ஆக.26 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநறையூர் கிராமத்தில் ஏன நல்லூர் பகுதி உள்ளது. இங்கு சுமார் 10 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்வதற்கு, மின் மோட்டாருக்கான மின் இணைப்புக் காக வயல்கள் நடுவில் மின்கம்பம் நடப்பட்டு மின் கம்பிகள் சென்று கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் அப்பகுதியைச் சார்ந்த கணேசன் என்ற விவசாயியின் நிலத்தில், அதிக மின்னழுத்தம் உள்ள மின்கம்பியை தாங்கிச் செல்லும் மின்கம்பம் நீண்ட நாட் களாக பழுதடைந்த நிலையில் எலும்புக் கூடு போல் காட்சியளிக்கிறது. இது எந்நேரத்திலும் கீழே விழும் நிலை உள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சம்பந்தப்பட்ட மின்சாரத் துறை அதிகாரிகளிடம், பழுதடைந்த மின் கம்பத்தை அப்புறப்படுத்தி மாற்றித் தர வலி யுறுத்தப்பட்டது ஆனால் மின்சாரத் துறை இதற்கு செவிசாய்க்காமல் உள்ளது. தற்போது விவசாயிகள், விவசாயத் தொழிலா ளர்கள், அப்பகுதியில் நடவுக்கு வயல்களை தயார்படுத்தும் பணியை மேற்கொண்டு வரு கின்றனர். பழுதடைந்த இந்த மின்கம்பம் எப்போது விழுந்து விபத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சத்துடன் விவசாயிகள் பணி யாற்றுகின்றனர்.
எனவே திருநறையூர் - ஏனநல்லூர் பகுதி வயல்வெளியில் உள்ள, பழுதான மின் கம்பத்தை உடனே சீர்செய்து விவசாயி களையும் பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியத்திற் குட்பட்ட விவசாயிகள் கோரியுள்ளனர்.
விபத்து நிகழும் முன், பழுதடைந்த மின் கம்பத்தை மின்சாரத் துறையினர் அகற்று வார்களா?