திருவாரூர், நவ.24- மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட மீன் மற்றும் இதர பொருள் விற்பனையாளர் சங்கத்தின் சார்பாக முத்துப்பேட்டை ஒன்றிய, நகர பகுதியில் பிரச்சாரம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பிரச்சார இயக்கத்தில் சிஐடியு மாவட்ட பொருளாளர் இரா.மாலதி, மீன் சங்க மாவட்ட தலைவர் டி.லெனின், மாவட்டச் செயலாளர் எம்.பி.கே.பாண்டியன், மாவட்டப் பொருளாளர் சி.செல்லதுரை ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் ஜி.தனுஷ்கோடி எப். கெரக்கோரியா, சிஐடியு முன்னாள் மாவட்டச் செயலாளர் பி.நடராஜன், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரன், நகரச் செயலாளர் டி.ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.