districts

img

‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் மனுக்கள் பதிவு செய்யும் முகாம்

புதுக்கோட்டை, டிச.18 - ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய  திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, திங்களன்று டெல்டா மாவட் டங்களில் மனுக்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடை பெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன் னமராவதியில் நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மனுக்கள் பதிவு செய்யும் முகாமினை பார்வையிட்டார். புதுக் கோட்டை மாவட்ட வருவாய் அலு வலர் மா.செல்வி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

திருச்சிராப்பள்ளி
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சிக் குட்பட்ட மண்டலம் 1- ஸ்ரீரங்கம் தேவி  ஹாலில் மக்களுடன் முதல்வர் சிறப்பு  முகாமை தொடங்கி வைத்தார். பின்பு  பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை  பெற்று முகாமை பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநக ராட்சி மேயர் அன்பழகன் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் திருவா ரூர், கூத்தாநல்லூர், திருத்துறைப் பூண்டி, மன்னார்குடி நகராட்சிகள் மற்றும் நன்னிலம், குடவாசல் பேரூ ராட்சிகள் ஆகிய இடங்களில் மக்களு டன் முதல்வர் முகாம் நடைபெற்றது. திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதி யில் நடந்த முகாமை கூடுதல் ஆட்சியர்  (வளர்ச்சி) ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சி.ப்ரியங்கா பார்வை யிட்டார். திருவாரூர் சட்டமன்ற உறுப்பி னர் பூண்டி கே.கலைவாணன் உட னிருந்தனர். குடவாசல் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதி மக்களுக்கும் திருக்குளம் தென்கரை மலர் திருமண மண்டபத்தில் மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சிக்கு குடவாசல் பேரூராட்சி தலைவர் முருகேசன் மகாலட்சுமி தலைமை வகித்தார். முகாமில் குடவா சல் சிபிஎம் நகரக் குழு செயலாளர் டி.ஜி. சேகர் தலைமையில், குடவாசல் பேரூ ராட்சி பொதுமக்களின் நலன் கருதி மனு  அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் உள்ள வாசுகி திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகா மினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்  நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். அரியலூர் அரியலூர் நகராட்சி அலுவல கத்தில் நடைபெற்ற முகாமை போக்கு வரத்து துறை அமைச்சர் சா.சி.சிவ சங்கர் தொடக்கி வைத்து, பொது மக்களி டமிருந்து மனுக்களை பெற்றார். முகா முக்கு ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் நகராட்சி  அலுவலகம் மற்றும் உடையார்பாளை யம் பேரூராட்சியில் நடைபெற்ற முகாமில்  சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க. கண்ணன் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

கரூர்

கரூர் மாநகராட்சி வாங்கபாளை யம் மண்டல எண்.1-இல் நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல்  பங்கேற்று, பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை, இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்வதை பார்வையிட்டார். கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி, கிருஷ்ண ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் க.சிவ காமசுந்தரி, மாநகராட்சி மேயர் வெ. கவிதா ஆகியோர் உடனிருந்தனர்.