districts

அரைகுறை வேலையால் அநியாயமாக பலியாகும் உயிர்கள்

முசிறி, மே 28-

    திருச்சிராப்பள்ளி மாவட் டம் முசிறி புறவழிச்சாலை யில் நெடுஞ்சாலைத்துறை யின் அரைகுறை வேலை யால் உயிர்ப்பலியும் பல  லட்சம் ரூபாய் பெறுமான முள்ள வாகனங்களும் சேத மடைகின்றன.  

    முசிறி புதிய பேருந்து நிலையம், உழவர் சந்தை,  தா.பேட்டை சாலை, புறவழிச் சாலை, பெட்ரோல் பங்க், தனியார் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் போதுமான அளவிற்கு பாதை விடுத்து சாலைத்  தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. தா.பேட்டை புற வழிச்சாலையில்  அரசுப் பணி மனைக்கு அருகில் சுமார் 400 அடி தூரத்திற்கு சாலைத் தடுப்புகள் அமைக்க வில்லை.  

   மேலும் 400 அடிக்கு அப்பால் மீண்டும் சாலைத்  தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இப்பகுதியில் போதுமான மின் விளக்கு கள் இல்லாமல் இருள் சூழ்ந்து உள்ளது. இத னால் இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்ப்பலியும் ஏற்படுகிறது. வாகனங்களும் சேதமடை கிறது.  

   கடந்த வெள்ளிக்கிழமை இரவு முசிறியிலிருந்து குளித்தலை சென்ற சொகுசு கார் சாலைத்தடுப்பில் ஏறி  தலை குப்புறக் கவிழ்ந்தது. இதில்  காரின் ஏர் பலூன்  திறந்ததால் காரில் பய ணித்த ரம்யா, ஜெயந்தி, நித்யா, ஆகிய மூவரும் உயிர்தப்பினர். வாகனம் சேதமடைந்தது.  

   கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த இடத்தில் விபத்துக் குள்ளாகியுள்ளது. இது குறித்து பலமுறை  நெடுஞ் சாலைத் துறையினரிடம் சாலைத்தடுப்பு அமைக்க  வேண்டுமென வலியுறுத்தி யும் நடவடிக்கை இல்லை. சாலைத்தடுப்புகள் அமைக்க நெடுஞ்சாலைத் துறையை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபடப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் ஒன்றியச் செயலாளர் நல்லு சாமி தெரிவித்துள்ளார்.