districts

செல்போன் பேசியவாறு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம்

கும்பகோணம், ஜூன் 19-

     கும்பகோணம் கோட்டை அரசு பேருந்து இராமேஸ்வ ரத்தில் இருந்து மதுரை வழித்தடத்தில் சனிக்கிழமை சென்று கொண்டு இருந்தது. பேருந்தை இயக்கிய ஓட்டுநர்  மோகன் ஒரு கையில் செல்போன் பயன்படுத்தி பேசிய வாறு ஓட்டிச்சென்றார்.

    இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் வெளி யானது. இதையடுத்து ஓட்டுநர் பணியின்போது செல்போன் பயன்படுத்தி பேருந்தை இயக்கியதற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்  பட்டது.

    இதையடுத்து கும்பகோணம் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் ராஜ்  மோகன் உத்தரவின் பேரில், ஓட்டுநர் மோகனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் (காரைக்குடி) சிங்காரவேல் உத்தரவிட்டார்.

    மேலும் இதேபோல் யாரேனும் செல்போன் பயன்  படுத்தி பயணிகள் பேருந்து இயக்குவது கண்டறியப் பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளர்.