அரியலூர், டிச.23 - அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்த கண்டிராதித்தம் கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை பேருந்து சேவை தொடக்கி வைக்கப்பட்டது. அக்கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட சட்டப்பேரவை உறுப்பி னர் கு.சின்னப்பா, திருச்சி மாவட்டம் லால்குடி யில் இருந்து திருமானூர் வரை சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை கண்டி ராதித்தம் கிராமம் வரை நீடித்து, அதன் சேவையை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக (கும்பகோணம் லிட்) திருச்சி மண்டல மேலாளர் புகழேந்தி தலைமை வகித் தார். கிளை மேலாளர்கள் அரியலூர் குண சேகரன், லால்குடி பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமானூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி அசோக சக்கர வர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.