தஞ்சை மாவட்டம், பாபநாசம் தெற்கு மட விளாகத்தில் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இந்தத் தெருவில் சாலை அமைத்து பத்து வருடத்திற்கு மேலானதால், புதிய சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இது குறித்த செய்தி தீக்கதிரில் வெளியிடப்பட்டது. தீக்கதிர் செய்தியைத் தொடர்ந்து தற்போது புதிதாக சாலைப் போடும் பணி நடந்து வருகிறது. செய்தி வெளியிட்ட தீக்கதிர் நாளிதழுக்கு அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.