districts

வைரிவயலில் மாட்டு வண்டி, குதிரை வண்டி போட்டி

அறந்தாங்கி ஏப்.26-

   புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள வைரிவயல் கிராமத்தில் உள்ள ஸ்ரீவீரமுனி ஆண்ட வர் சந்தனக் காப்பு உற்சவத்தை முன்னிட்டு  83- ஆம் ஆண்டாக மாட்டுவண்டி குதிரை - வண்டி எல்கை பந்தயம்  நடைபெற்றது. மதுரை, திருச்சிராப்பள்ளி ,தஞ்சாவூர், புதுக்கோட்டை இராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து  கொண்டுவரப்பட்ட 100 க்கும் மேற்பட்ட   மாடுகளும் 70.க்கும் மேற்பட்ட  குதிரை களும்  போட்டியில் கலந்து கொண்டன.

   பெரிய மாடு, கரிச்சான் மாடு,  சிறிய குதிரை  நடுக்குதிரை, நடுமாடு மற்றும் பூஞ்சிட்டு குதிரை  என  ஏழு பிரிவுகளாக  போட்டி நடத்தப்பட்டது.  இரட்டை மாட்டு வண்டிகள் மற்றும் குதிரை வண்டிகள்  கலந்து கொண்டு  நிர்ணயிக்கப்பட்ட பந்தைய இலக்கினை நோக்கி ஒன்றை யொன்று முந்திச் சென்றன. போட்டியில் பிரிவு வாரியாக  வெற்றி முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாட்டின் உரிமையாளர்களுக்கு  6 லட்சத்து 13 ஆயிரம் ரொக்கப்பரிசு, கோப்கைகள் வழங்கப்பட்டன.