மயிலாடுதுறை, மார்ச் 21- மயிலாடுதுறை மாவட்டம், நல்லாடை ஊராட்சி முதலியார் தெருவில் குறைந்த மின் அழுத்தத்தால் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 100 கிலோ வாட் திறன் கொண்ட புதிய மின் மாற்றி இயக்க தொடக்க விழா நடை பெற்றது. விழாவிற்கு மயிலாடுதுறை மின் வாரிய செயற்பொறியாளர் கலியபெரு மாள் தலைமை தாங்கினார். சங்கரன்பந்தல் உதவி மின் பொறியாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். நிவேதா எம்.முரு கன் எம்எல்ஏ புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்தார். விழாவில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், ஊராட்சிக்குழு உறுப்பினர் கிருபாவதி சிவக்குமார், முன் னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.