தஞ்சாவூர், செப்.12- அரசு மருத்துவமனையில் வழங்கப் படும் ஊட்டச்சத்து டானிக் பாட்டில்கள் குப்பையில் கொட்டப்பட்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை ஆர்எம்எஸ் காலனியில் உள்ள சேகர் காலனியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் அருகே மழைநீர் வடிகால் வாரி உள்ளது. இந்த பகுதியில் வசிப்ப வர்கள் வீடுகளின் குப்பைகளை வாரி ஓரத்தில் கொட்டுவது வழக்கம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அந்த வாரி ஓரத்தில் உள்ள குப்பைகளுக்கு மத்தியில் சுமார் 200 மருந்து பாட்டிகள் கொட்டப்பட்டிருந்தன. இவை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் “அயர்ன் அண்ட் போலிக் ஆசிட் சிரப்-ஐ.பி” மருந்துகளாகும். இந்த மருந்துகள் கடந்த மாதத்துடன் காலாவதி யாகி விட்டன. இவை சத்து குறைவாக உள்ள குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் மருந்தாகும். காலாவதி யான இந்த மருந்துகளை முறையாக திருப்பி ஒப்படைக்காமல், அதனை குப்பை யில் கொட்டியுள்ளனர். இந்த மருந்து பாட்டில் கள் எப்படி, யாரால் கொட்டப்பட்டது என தெரியவில்லை. இதுகுறித்து வந்த தகவ லின் பேரில், பொது சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.