மன்னார்குடி, நவ.4 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் எழுதிய ‘மகாத்மா மண்ணில் மதவெறி’ என்னும் நூல் அறிமுக விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க திரு வாரூர் மாவட்ட மையத்தின் சார்பாக மன்னார்குடியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எம்.சௌந்தர ராஜன் தலைமை வகித்தார். மன்னார் குடி கிளை செயலாளர் தியாக சிவசுப்பிர மணியன் வரவேற்றார். மாவட்டச் செய லாளர் ஜி.வெங்கடேசன் விழா நோக்க உரையாற்றினார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேரா.முனைவர் இரா.காமராசு நூலை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரை யாற்றினார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், தீக்கதிர் நாளி தழின் திருச்சி பதிப்பு பொறுப்பாளர் எழுத்தாளர் ஐ.வி.நாகராஜன் ஆகி யோர் வாழ்த்தி பேசினர். நூலின் ஆசிரியரும், சிபிஎம் அரசியல் தலை மைக் குழு உறுப்பினருமான ஜி.ராம கிருஷ்ணன் ஏற்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் மு.செல்வராஜ் நன்றி கூறினார். விழாவினை தமுஎகச மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.