districts

சுருக்குமடி வலையை தடை செய்யாவிட்டால் மாபெரும் போராட்டம்

மயிலாடுதுறை, ஆக.5 -

      சுருக்குமடி வலையை நிரந்தரமாக தடை செய்யவில்லையெனில் மாபெ ரும் போராட்டத்தை நடத்துவதென 9  மாவட்ட மீனவர்களின் ஆலோசனைக்  கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

     மயிலாடுதுறை மாவட்டம் தலைமை  மீனவ கிராமமான தரங்கம்பாடியில் நடைபெற்ற கூட்டத்திற்கு அக்க ரைப்பேட்டை மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமை வகித்தனர். தரங்கம்பாடி பஞ்சாயத்தார்கள் முன்னிலை வகித்த னர். நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சை, பாண்டிச்சேரி, புதுக்கோட்டை, இராம நாதபுரம், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 9 மாவட்ட பிரதிநிதிகள் தங்க ளது கருத்துகளை தெரிவித்தனர்.

      கூட்டத்தில், “கடல் வளம் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாது காக்கும் வகையில் சுருக்குமடி வலை,  இரட்டை மடிவலை, அதிவேக இன்ஜின் கள் பொருத்தப்பட்ட படகுகளுக்கு முழு மையாக தடை விதிக்க வேண்டும்.  

    மாவட்ட ஆட்சியர்கள், மீன்வளத்துறை  அலுவலர்கள் மூலம் இந்த கோரிக் கையை தமிழக முதல்வருக்கு தெரி விக்க வேண்டும். ஆக.18 அன்று இராமநாதபுரத்தில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளும் தமிழக முதல்வரிடம், 9 மாவட்ட மீனவ பிரதிநிதிகள் இந்த கோரிக்கை மனுவினை அளிக்க வேண்டும். தொடர்ந்து மாவட்ட ஆட்சி யர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள் சுருக்குமடி வலைக்கு தடை  விதிக்கா  விட்டால், 9 மாவட்ட மீனவர்கள் ஒன்றி ணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது” என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    மேலும் கடந்த நான்கு நாட்களாக 21  கிராம மீனவர்கள் வேலைநிறுத்தப் போ ராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத் தக்கது.