districts

சுருக்குமடி வலையை தடை செய்க மயிலாடுதுறை மீனவர்கள் வேலைநிறுத்தம்

மயிலாடுதுறை, ஆக.2-

    மயிலாடுதுறை மாவட்டம் தரங் கம்பாடியில் 19 மீனவ கிராமங்களின் பஞ்சாயத்தார்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது.

    மயிலாடுதுறை மாவட்ட மீனவ  கிராமங்களின் தலைமை மீனவ கிராம  தரங்கம்பாடி பஞ்சாயத்தார்கள் தலை மையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தரங்கம்பாடி, சின்னூர்பேட்டை, குட்டி யாண்டியூர், வெள்ளக்கோயில், பெரு மாள்பேட்டை, புதுப்பேட்டை, தாழம் பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு,  வானகிரி, நாயக்கர்குப்பம், மேல மூவர்கரை, சாவடிகுப்பம், கீழமூவர்  கரை, தொடுவாய், சின்னகொட்டாய்  மேடு, கூழையார், பழையார், கொடி யம்பாளையம் உள்ளிட்ட 19 மீனவ  கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்தார்கள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்ட னர்.

   கூட்டத்தில், தமிழக அரசால் தடை  செய்யப்பட்டுள்ள சுருக்குமடி வலை யை தடை செய்ய வேண்டும். சுருக்கு மடி வலையை முற்றிலும் தடை செய்ய  நடவடிக்கை எடுக்கும் வரை மயி லாடுதுறை மாவட்டத்தில் விடுமுறை விடப்படும் என தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

   இந்நிலையில், சுருக்குமடி வலை யை முழுமையாக தடை செய்ய வலி யுறுத்தி, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 21 மீனவ கிராமங்களைச் சேர்ந்த  மீனவர்கள் திங்கள்கிழமை நள்ளிரவு  முதல் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லா மல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள னர். நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பி டத்தக்கது.