மயிலாடுதுறை, ஆக.1- மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் கடைவீதியில் ஒன்றிய அரசின்மக்கள் விரோத,விவசாய விரோத பட்ஜெட்டை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மாவட்டக்குழு உறுப்பினர் லெ. சுந்தரலிங்கம் தலைமையில் நடை பெற்றது. ஐக்கிய விவசாயிகள் முன்னணி உறுப்பினர்கள், மக்கள் அதிகாரம் ரவி,கஜேந்திரன் மற்றும் 60 க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத் தில் பங்கேற்றனர்.நிறைவாக பட்ஜெட் நகலை எரித்து கண்டன முழக்கமிட்டனர். நாகப்பட்டினம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போ ராட்டம் தலைஞாயிறு நாகப்பட்டி னம் மாவட்டம் கடை தெருவில் நடை பெற்றது. போராட்டத்தில் விச மாவட்ட செயலாளர் கே.சித்தார்த் தன் கண்டன உரையாற்றினார்.தலைஞாயிறு சிபிஎம் ஒன்றிய செய லாளர் ஏ.ராஜா கலந்து கொண்டார். நாகப்பட்டினம் நகரம் அபிராமி அம்மன் திருவாசலில் நடைபெற்ற நகல் எரிப்பு போராட்டத்தில் நாகை தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ். என்.ஜீவாராமன். வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ. கே.குமார். மாவட்ட குழு உறுப்பினர்கள் என். வடிவேல். எம்.சுப்பிரமணியன் பி. சந்திரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றி னர். கீழ்வேளூர் கடை தெருவில் நடை பெற்ற நகல் எரிப்பு போராட்டத்தில் விச மாவட்டத் தலைவர் எம். என். அம்பிகாபதி,வடகரை ஊராட்சி மன்ற தலைவர் எஸ். பாண்டியன் உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர்.