திரிபுராவில் பாஜக-ஆர்.எஸ்.எஸ். கும்பல்கள் நடத்திவரும் தொடர் அராஜகத்தைக் கண்டித்து மன்னார்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர் செயலாளர் ஜி. தாயுமானவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலாளர் கே.ஜெயபால், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர். குமாரராஜா, டி.முருகையன். ஜி.ரகுபதி, எம்.திருஞானம், ஏ.கோவிந்தராஜ் எம்டி. கேசவராஜ், ஏபிடி லோகநாயகி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.