புதுக்கோட்டை, ஜூன் 11 -
விமர்சனங்களையே சகித்துக் கொள்ள முடியாதவர்கள் பாஜக வினர் என்றார் முன்னாள் ஒன்றிய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பி னருமான ப.சிதம்பரம். புதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டி: \
எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து திருமயத்தில் ரூ.2 கோடியில் நூலகம் கட்டும் திட்டம் இம்மாத இறுதிக்குள் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் பணிகள் தொடங்கப் படலாம். ஆலங்குடியில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக் கான கட்டடம் ரூ. 1.25 கோடியில் கட்டும் திட்டத்தில் வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலையில் இருக்கிறது.
இவ்விரு பணிகளை யும் விரைந்து மேற்கொள்ள ஆட்சியரைச் சந்தித்து வலியுறுத்தி னேன். ஒன்றிய ஆளும் பாஜகவை யாரும் தரக்குறைவாக விமர்சிக்க வில்லை. இவர்கள் விமர்சனங்களையே பொறுத்துக் கொள்ள மாட்டார் கள். பிரதமரை விமர்சிப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத் தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார். விமர்சிக்கவே கூடாதா? விமர்சனத்தையே சகித்துக்கொள்ள முடியாத ஒரு கட்சி, ஆட்சியை இப்போதுதான் பார்க்கிறேன் என்றார்.