விருதுநகர், ஜூன் 28-
பாஜகவின் தோல்வி மோடியின் கண் களுக்குத் தெரிவதால் புலம்புகிறார் என்று ப.மாணிக்கம்தாகூர் எம்.பி., கூறினார்.
விருதுநகரில் நேரு யுகவேந்திரா சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுநகர் நாடாளு மன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் பரிச ளித்தார்.
பின்னர் அவர்செய்தியாளர்களிடம் கூறு கையில், 2014 முதல் ஊழல், ஊழல் என பிர தமர் மோடி கூறி வருகிறார். எதிர்க்கட்சி யைச் சேர்ந்த ஒருவரைக் கூட இதுவரை ஊழல் குற்றவாளியென இவர்களால்நிரூ பிக்க முடியவில்லை.மக்களை ஏமாற்று வதற்காக ஒரே பொய்யை மாறி, மாறி இவர் கூறி வருகிறார். ஒரு பொறுப்புள்ள நாட்டின் பிரதமர் பேசும் பேச்சா இது?இது அவரது பத விக்கே மிகப்பெரிய இழுக்காகும்.
மோடியை பொறுத்தமட்டில் தோல்வி என்பது அவரது கண்ணுக்கு தெரிகிறது. இமாச்சல் பிரதேசம், கர்நாடகா மாநி லத்தின் தோல்விகள் தொடர்ந்துமுன்னால் வந்து செல்கின்றன. எனவே,தோல்வியைக் கண்டு அஞ்சிஇதுபோன்ற புலம்பல்களில் ஈடுபட்டுள்ளார்.எனவே, வரும் நாடாளு மன்றத் தேர்தலில்மக்கள் அவருக்கு தோல்வியை தர தயாராக உள்ளனர்.
மதம் மற்றும் வெறுப்பு அரசியலை நம்பியே பாஜக இந்தியாவில் அரசியல் செய்து வருகிறது. இவர்களது ஆட்சி காலத் தில் இந்தியாவின் 40 ஆண்டுகால வேலை வாய்ப்பு பறிபோயுள்ளது.இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது.
பெண்களின்பாதுகாப்பு சூறையா டப்பட்டு வருகிறது. நாட்டிற்காக விளை யாடிய மல்யுத்த வீராங்கனைகள் பாஜக எம்.பி பிரிஜ்பூஷன் சிங்கால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டனர். அவ ருக்கு எதிராக வீராங்கனைகள் போராடி வரு கின்றனர்.மணிப்பூர்56 நாட்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து பிர தமர் வாய் திறக்கவே மறுத்து வருகிறார்.இந்தியா வெறுப்பு அரசியலால் பாதிக்கப் பட்டு வருகிறது. எனவே, மோடி பதவியில் இருக்கும் ஒவ்வொரு நாளும் இந்தியா விற்கு ஆபத்துதான் என்று தெரிவித்தார்.