கரூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள், தமிழ்க்கவிஞர்கள் நாளை முன்னிட்டு கரூர் வட்டாட்சியர் அலுவலக முகப்பில் உள்ள சங்கப் புலவர்களான கருவூர் புலவர்கள் பன்னிருவர் நினைவுத்தூணுக்கு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் பா.ரூபினா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.