கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் தொற்று அதிகரித்துள்ள நிலையில், கேரளாவில் இருந்து கோழி, வாத்துகளை ஏற்றிவரும் வாகனங்கள் தமிழ்நாட்டிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு – கேரள எல்லையான புளியரையில் நோய் தடுப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது.