districts

img

பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி

பாபநாசம், டிச.1 - தஞ்சை, கும்பகோணம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை உள்ளிட்ட கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்ற சைக்கிள் போட்டி அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவிலில்  நடந்தது.  இதற்கான துவக்க விழா நிகழ்ச்சி அய்யம்பேட்டையை அடுத்த வழுத்தூர் சவுக்கத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சாதிக் அலி தலைமை வகித்தார். போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம் தொடங்கி வைத்தார்.  போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மூத்த நிர்வாக உறுப்பினர் பசீர் அகமது பரிசுகளை வழங்கினார். இப்போட்டி, 14, 17, 19 வயது பிரிவில் நடந்தது. போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் மாநில அளவிலான சைக்கிள் போட்டிக்கு தகுதி பெற்றனர்.