தஞ்சாவூர், ஜூன் 8-
தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் ஆலோசனை கூட்டம் மல்லிப் பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள சங்க அலு வலக கட்டிடத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்செய லாளர் தாஜூதீன் தலைமை வகித்தார். இராமநாதபுரம் மண்டபம் பாலசுப்பிரமணியன், ஜாகிர், பாலன், சோழி யக்குடி கோபி, புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப் பட்டினம் மீனவர் சங்க தலைவர் அசன் முகைதீன், ஜெக தாப்பட்டினம் மீனவர் சங்க தலைவர் உத்திராபதி, தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் சங்க தலைவர் ராஜ மாணிக்கம், செயலாளர் வடுகநாதன், செல்வக்கிளி, முத்து, இப்ராகிம், இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ‘‘தஞ்சை மாவட்டத்தில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு புரிந்துணர்வு ஒப்பந்தப்படி திங்கள், புதன், சனி ஆகிய தினங்களில் தான் விசைப்படகுகள் கட லுக்கு சென்று மீன் பிடிக்க செல்லமுடியும். மீன்பிடி தடைக்காலம் ஜூன் 14 அன்று (புதன்கிழமை) நள்ளிரவு டன் நிறைவு பெறுகிறது. இதனால் ஜூன் 15 (வியா ழக்கிழமை) காலை தான் கடலுக்கு செல்ல முடியும். ஜூன் 16 வெள்ளிக்கிழமை என்பதால், ஜூன் 14 அன்று காலை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அரசு அனு மதிக்க வேண்டும்’’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.