விருதுநகர், மே.25-
விருதுநகர் கச்சேரி சாலை யில் புதிய வணிக வளாகம் கட்டப் பட்டுள்ளது. அதன் 2 ஆவது மாடியில் விளம்பர பதாகை வைக்கும் பணியில் கருப்பசாமி நகரில் உள்ள காலனியைச் சேர்ந்த சுரேஷ் குமார்(45) என்பவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விளம் பர பதாகையில் மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து, சுரேஷ்குமார் மீது மின்சாரம் தாக்கியதால், அவர் கீழே விழுந்துள்ளார். படுகாய மடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் அங்கு முதலு தவி சிகிச்சையளித்தனர். ஆனால், சிறிது நேரத்தில் சுரேஷ்குமார் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து விருது நகர் மேற்கு காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.